என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
கடன் பிரச்சனை தீர ஆகாச தீபம் ஏற்றலாம்...
- ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார்.
- வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம்.
கார்த்திகை மாதம் முழுவதும் தினசரி சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு அருகில் வீதியில் உயரமான தீபம் ஏற்ற வேண்டும். அல்லது வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம். இந்த தீபத்துக்கு ஆகாச தீபம் என்று பெயர்.
இதன் ஒளியானது எட்டு திசைகளிலும் பரவ வேண்டும். இன்று (புதன்கிழமை) மாலை சூரியன் மறைந்த பின் தீபம் ஏற்றி சுவாமி சன்னதியில் சங்கல்பம் செய்து கொண்டு மண்அகல் விளக்கில் நல்லெண்ணை விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள கோவிலோ தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தீபம் வைத்து வணங்க வேண்டும்.
கார்த்திகை மாதம் முழுவதும் ஆகாச தீபம் ஏற்ற முடியாதவர்கள் கடைசி 3 நாட்களில் (நவம்பர் 21, 22, 23) ஏற்றலாம். ஒரு நாளாவது ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம் சென்று தீபம் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார். இதனால் மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து தீபம் ஏற்றுபவர்களின் அனைத்து துன்பங்களையும், கடனையும் விலக செய்வார் என்பது நம்பிக்கையாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்