search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஆடி மாதம் விரதம் இருந்து வீட்டில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி?
    X

    ஆடி மாதம் விரதம் இருந்து வீட்டில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி?

    • செவ்வரளி பூக்கள், மல்லிகை, முல்லை ஆகியவற்றை அம்மனுக்கு சாற்றலாம்.
    • 'லலிதா சஹஸ்ரநாமம்' கூறலாம், அல்லது அதை பாடலாக ஒலிக்கச் செய்யலாம்.

    தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி மாதப் பிறப்பை, ஆடிப்பண்டிகை என்று பலரும் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு, ஜூலை 17-ம்தேதி, ஞாயிறு அன்று ஆடி மாதம் பிறந்தது. ஆடி மாதம் முழுவதும் விரதம் இருந்து வீட்டில் சிறப்பாக அம்மனை வரவேற்று, அம்மனின் ஆசி பெறுவது எப்படி இங்கே பார்க்கலாம்.

    வீட்டை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, எளிதாக அலங்கரியுங்கள். வழக்கமாக, எந்த பண்டிகையாக இருந்தாலும் முதல் நாளே வீட்டை துடைத்து, பூக்கள், மாவிலை தோரணம் என்று அலங்கரிக்கும் பழக்கம் உள்ளது. வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்து, அழகாக கோலமிடுங்கள். மாவிலை தோரணம் கட்டி, மஞ்சள் தெளித்து, விளக்கேற்றுங்கள். அம்மனுக்கு படைப்பதற்கென்று, தனியே சிவப்பு அல்லது பச்சை நிற பட்டுத்துணியை வாங்கி வைக்கலாம்.

    அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை அறையில் இருக்கும் எல்லா சுவாமி படங்களையும் துடைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

    செவ்வரளி பூக்கள், மணம் வீசும் மல்லிகை, முல்லை ஆகியவற்றை அம்மனுக்கு சாற்றலாம். ஒரு வெண்கல சொம்பில் புதிதாய் தண்ணீர் பிடித்து, ஒரு சிட்டிகை மஞ்சள், குங்குமம் சேர்த்து, பூஜை அறையில் வைத்து மனதார அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

    தெரிந்தவர்கள், 'லலிதா சஹஸ்ரநாமம்' கூறலாம், அல்லது அதை பாடலாக ஒலிக்கச் செய்யலாம். பழங்கள் மற்றும் இனிப்பை வைத்து நைவேத்தியம் செய்யலாம், அல்லது அம்பாளுக்கு பாயசம், அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து வணங்கலாம். புதிதாக காய்ச்சிய பாலில், சிறிது சர்க்கரை சேர்த்து நைவேத்தியம் செய்யலாம். அதே போல, தனியே பிரசாதம் செய்து, மற்றவர்களுக்கு வழங்கலாம்.

    கூழ் வார்ப்பதற்கு மிகவும் விசேஷமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.

    Next Story
    ×