search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பெண்கள் ராகு காலத்தில் மௌன விரதம் இருந்தால்....
    X

    பெண்கள் ராகு காலத்தில் மௌன விரதம் இருந்தால்....

    • எல்லா விரதங்களையும் விட சிறப்பானது இந்த மௌன விரதம்.
    • செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் மட்டுமாவது மௌன விரதம் இருக்கலாம்.

    மௌனவிரதம் இருப்பதில் இரண்டு நன்மைகள் நமக்கு நடக்கின்றது. ஒன்று, செய்த பாவத்திற்கான கணக்குகள் குறையும். புதியதாக அந்த சமயத்தில் நாம் பேசி வரக்கூடிய பாவங்களை வர விடாமல் தடுக்கும். எல்லா விரதங்களை விட சிறப்பான விரதம் இந்த மௌன விரதம் தான்

    தினமும் வரக்கூடிய ராகுகால நேரம் என்பது 1 1/2 மணி நேரம். இந்த ஒன்றரை மணி நேரத்தில் பொதுவாகவே யாரும் நல்ல விஷயங்களை செய்ய மாட்டார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த ராகு கால வேளையில் நாம் என்ன நினைக்கின்றோமோ, நாம் என்ன பேசுகின்றோமோ, அது பலிதம் ஆகும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை.

    ராகு கால வேளையில் தானே தீராத கட்டத்திற்கான வேண்டுதலை துர்க்கை அம்மனிடம் வைத்து, பிரார்த்தனை செய்கின்றோம். அந்த சமயத்தில் நாம் வைக்கும் வேண்டுதல் விரைவாக பலிக்குதா? இல்லையா? முடிந்தவரை இந்த ராகு கால சமயத்தில் கெட்ட வார்த்தைகளையும் அடுத்தவர்களுக்கு திட்ட எதிர்மறை எண்ணங்களையும் உங்களுடைய மனதிற்குள் கொண்டு வரவே கூடாது.

    நீங்கள் வெளியிடங்களுக்கு சென்று வேலை செய்பவர்களாக இருந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, இந்த ராகுகால சமயத்தில் மௌன விரதம் இருப்பது மிகவும் நல்லது. வெளியில் சென்று வேலைக்கு செல்பவர்களுக்கு இது சாத்தியமில்லை. இருப்பினும், அந்த ராகு கால சமயத்தில் அனாவசியமான பேச்சை தவிர்த்துக் கொள்ளலாம். அந்த சமயத்தில் அம்மன்களின் பெயரையோ அல்லது 'ஓம் சக்தி' என்ற மந்திரத்தையும் மனதிற்குள் உச்சரித்துக் கொள்வது நமக்கு பல நன்மையை தேடித்தரும்.

    நீங்கள் வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தால் உங்களுடைய பாவங்களை குறைப்பதற்கும் இந்த ஒன்றரை மணி நேரம், முடிந்தால் மௌன விரதம் இருக்கலாம். மௌன விரதம் இருக்கும் பெண்களுக்கு கட்டாயம் நல்ல பலன் உண்டு என்பது மட்டும் உறுதி. (செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் மட்டுமாவது இந்த மௌன விரதத்தை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.)

    குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் வந்தால், அந்த ஞாயிற்றுக் கிழமையில் 4.30 யிலிருத்து 6 மணி வரை ராகு காலமாகும். அந்த தினத்தில் பிரதோஷ காலமும் சேர்ந்து வரும் பட்சத்தில், அந்த 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் மௌன விரதம் இருந்து, எந்த வேண்டுதலை எம்பெருமான் இடமும், சக்திதேவி இடமும் வேண்டி கேட்டுக் கொண்டால், உங்களுடைய வேண்டுதல் கூடிய விரைவில் பலிக்கும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

    Next Story
    ×