என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகசக்தி அம்மன் கோவில் செடல் உற்சவம்
Byமாலை மலர்30 April 2016 9:17 AM IST (Updated: 30 April 2016 9:17 AM IST)
விருத்தாசலம் நாகசக்தி அம்மன் கோவில் செடல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் உள்ள நாகசக்தி அம்மன் கோவிலில் வருடந்தோறும் சித்திரை செடல் உற்சவம் நடப்பது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டிற்கான உற்சவம் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வந்து அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 26-ந்தேதி திருவிளக்கு பூஜையும், தினந்தோறும் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி பல்வேறு வாகனங்களில் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று செடல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மாப்பொடி, திரவியப்பொடி, பன்னீர் புஷ்பங்களால் அபிஷேக ஆராதணைகளும், மகா தீபாராதனைகளும் நடந்தன. அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், செடல், நீட்டு அலகுகள் அணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து அன்னாபிஷேகமும், அன்னதானமும், இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று செடல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மாப்பொடி, திரவியப்பொடி, பன்னீர் புஷ்பங்களால் அபிஷேக ஆராதணைகளும், மகா தீபாராதனைகளும் நடந்தன. அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து மணிமுக்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், செடல், நீட்டு அலகுகள் அணிந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து அன்னாபிஷேகமும், அன்னதானமும், இரவு அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X