என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி
Byமாலை மலர்10 Feb 2017 8:51 AM IST (Updated: 10 Feb 2017 8:51 AM IST)
நெல்லை நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழாவையொட்டி தாமிரபரணி ஆற்றில் நேற்று தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது.
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ந் தேதி திருவிழாவில் நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சியும், அன்று இரவு சுவாமி-அம்பாள் வீதிஉலாவும் நடைபெற்றன.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், ஸ்ரீ தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேசுவரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகளுடன் நேற்று மதியம் தாமிரபரணி ஆற்றுக்கு புறப்பட்டனர். சுவாமி நெல்லையப்பர் ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சென்று தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.
அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.
இன்று 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சவுந்திர சபா மண்டபத்தில், சவுந்திர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், அகஸ்தியர், ஸ்ரீ தாமிரபரணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேசுவரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகளுடன் நேற்று மதியம் தாமிரபரணி ஆற்றுக்கு புறப்பட்டனர். சுவாமி நெல்லையப்பர் ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பாலம் வழியாக கைலாசபுரம் சென்று தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர்.
அங்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தைப்பூச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.
இன்று 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சவுந்திர சபா மண்டபத்தில், சவுந்திர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X