என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புளியங்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம்
Byமாலை மலர்10 Feb 2017 10:04 AM IST (Updated: 10 Feb 2017 10:05 AM IST)
புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சமுதாய மண்டகபடிதாரர்கள் சார்பில் சுவாமி அழைப்பு, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.
10-ம் திருநாளான நேற்றுதேரோட்டம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து பகல் 1 மணிக்கு தேர் நிலை வந்து சேர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளை(11-ந்தேதி) புன்னையாபுரம் யாதவ சமுதாயம் சார்பில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி, தக்கார் சத்தியசீலன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
10-ம் திருநாளான நேற்றுதேரோட்டம் நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து பகல் 1 மணிக்கு தேர் நிலை வந்து சேர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளை(11-ந்தேதி) புன்னையாபுரம் யாதவ சமுதாயம் சார்பில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீதேவி, தக்கார் சத்தியசீலன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X