என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ராமநவமி விழா
Byமாலை மலர்6 April 2017 9:47 AM IST (Updated: 6 April 2017 9:47 AM IST)
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது.
விழாவையொட்டி, தினமும் மூலவர் தேவநாதசுவாமி, செங்கமலத்தாயார், ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான ராமநவமியையொட்டி நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபதரிசனம் நடந்தது. பின்னர், காலை 10 மணிக்கு ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்பட 18 விதமான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடந்தது. பிரபந்தம் படிக்கும் நிகழ்ச்சியும், இந்திர விமானத்தில் ராமர் வீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் கடலூர் அருகே குமராபுரம் மெயின்ரோட்டில் உள்ள 41 அடி உயர காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று நடைபெற்றது. இதில் 41 அடி உயர ஆஞ்சநேயருக்கு 2,008 வடை மாலையும், 41 அடி உயர அங்கவஸ்திரமும், பூ மாலையும் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவில், நெல்லிக்குப்பம் வேணுகோபாலசுவாமி கோவிலில் ராமநவமி விழா நடந்தது.
விழாவையொட்டி, தினமும் மூலவர் தேவநாதசுவாமி, செங்கமலத்தாயார், ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
விழாவில் சிகர நிகழ்ச்சியான ராமநவமியையொட்டி நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபதரிசனம் நடந்தது. பின்னர், காலை 10 மணிக்கு ராமர், லட்சுமணன், சீதை, ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்பட 18 விதமான பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடந்தது. பிரபந்தம் படிக்கும் நிகழ்ச்சியும், இந்திர விமானத்தில் ராமர் வீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல் கடலூர் அருகே குமராபுரம் மெயின்ரோட்டில் உள்ள 41 அடி உயர காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று நடைபெற்றது. இதில் 41 அடி உயர ஆஞ்சநேயருக்கு 2,008 வடை மாலையும், 41 அடி உயர அங்கவஸ்திரமும், பூ மாலையும் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீழ்பட்டாம்பாக்கம் கோதண்டராமர் கோவில், நெல்லிக்குப்பம் வேணுகோபாலசுவாமி கோவிலில் ராமநவமி விழா நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X