search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் 25-ந்தேதி நடக்கிறது
    X

    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் 25-ந்தேதி நடக்கிறது

    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 24-ந் தேதி மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 24-ந் தேதி மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

    25-ந்தேதி காலை 10.15 மணிக்கு மாலை மாற்றுதலும், 11 மணிக்கு ஊஞ்சலடி உற்சவமும், 12 மணி முதல் 1 மணிக்குள் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 29-ந்தேதி காலை 10.45 மணிக்கு மேல் 12 மணிக்குள் பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து சாமி, அம்மன் சங்கரமடத்தில் எழுந்தருளுகின்றனர். 30-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×