என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
Byமாலை மலர்26 May 2018 3:58 AM GMT (Updated: 26 May 2018 3:58 AM GMT)
பல்வேறு சிறப்பு பெற்ற கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்றுமுன் தினம் இரவு அம்மன் தவக்கோலம், சிவபெருமான் காட்சியளித்தல் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து நேற்று மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 12 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு திருமண மறைசடங்கு நிகழ்ச்சியும், சாமி வீதி உலாவும் நடைபெற்றது.
வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஊஞ்சல் உற்சவமும், 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 30-ந்தேதி (புதன்கிழமை) மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 12 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு திருமண மறைசடங்கு நிகழ்ச்சியும், சாமி வீதி உலாவும் நடைபெற்றது.
வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஊஞ்சல் உற்சவமும், 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 30-ந்தேதி (புதன்கிழமை) மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X