search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு - சிறப்பு அபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    நெல்லையப்பர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு - சிறப்பு அபிஷேகம் நாளை நடக்கிறது

    நெல்லையப்பர் கோவிலில் நாளை கலசாபிஷேக பூஜையும், சுவாமி, அம்பாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.
    நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 27-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து 28-ந்தேதி மண்டல பூஜை தொடங்கியது. இந்த பூஜை நாளை(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இதையொட்டி அன்று காலை 8 மணிக்கு அம்மன் சன்னதியில் 1008 சங்காபிஷேகமும், 9 மணிக்கு 1008 கலசாபிஷேக பூஜையும், சுவாமி, அம்பாள் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஆனிப்பெருந்திருவிழா பந்தல் கால் நாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 1 மணிக்கு ஆறுமுகநயினார் சன்னதியில் வைத்து அன்னதானம் நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன் தங்க சப்பரத்திலும், விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பரத்திலும் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கோவில் செயல் அலுவலர் ரோஷினி தெரிவித்து உள்ளார். 
    Next Story
    ×