என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: தேர்கள் சுத்தம் செய்வதற்கான பணி தொடக்கம்
Byமாலை மலர்6 Jun 2018 5:16 AM GMT (Updated: 6 Jun 2018 5:16 AM GMT)
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் மிக சிறப்பு வாய்ந்தது. இந்த தேரோட்டத்துக்காக அந்த 5 தேர்களும் சுத்தம் செய்யப்படுகின்றன.
நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். ஆனித்திருவிழா தேரோட்டம் மிக சிறப்பு வாய்ந்தது. சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் வெளியூரை சேர்ந்த பக்தர்களும் தேரோட்டத்தை பார்ப்பதற்காக நெல்லைக்கு வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா வருகிற 19-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 27-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவுக்கான பணிகள் தொடங்குவதற்காக கடந்த 1-ந் தேதி நெல்லையப்பர் கோவில் 2-வது பிரகாரத்தில் விநாயகர் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.
நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் உள்ளன. இந்த தேரோட்டத்துக்காக அந்த 5 தேர்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக தேரினை சுற்றியுள்ள பாதுகாப்பு கண்ணாடி கொட்டகை அகற்றப்பட்டது. தொடர்ந்து தேர் சுத்தம் செய்யப்படும் பணி தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா வருகிற 19-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 27-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவுக்கான பணிகள் தொடங்குவதற்காக கடந்த 1-ந் தேதி நெல்லையப்பர் கோவில் 2-வது பிரகாரத்தில் விநாயகர் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.
நெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் உள்ளன. இந்த தேரோட்டத்துக்காக அந்த 5 தேர்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக தேரினை சுற்றியுள்ள பாதுகாப்பு கண்ணாடி கொட்டகை அகற்றப்பட்டது. தொடர்ந்து தேர் சுத்தம் செய்யப்படும் பணி தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X