search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜேஷ்டாபிஷேகம் 2-வது நாள்: உற்சவர் மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவிப்பு
    X

    ஜேஷ்டாபிஷேகம் 2-வது நாள்: உற்சவர் மலையப்பசாமிக்கு முத்துக்கவசம் அணிவிப்பு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் பகல் 11 மணியில் இருந்து 2 மணிவரையிலும், மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரையிலும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    மாலை உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்கவசம் அணிவிக்கப்பட்டு, கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்து, சகஸ்ர தீபலங்கார சேவை மண்டபத்தில் வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தப்பட்டது. ஊஞ்சல் சேவை முடிந்ததும் மாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் முத்துக்கவசத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஜேஷ்டாபிஷேகம் 2-வது நாளையொட்டி கோவிலில் நேற்று விசேஷ பூஜை, வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. ஜேஷ்டாபிஷேகத்தின் 3-வதுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) உற்சவ மூர்த்திகளுக்குத் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. 
    Next Story
    ×