search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்கு சமம்
    X

    திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்கு சமம்

    திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று கூறலாம். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருமங்கையாழ்வார், ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளை பத்துப் பாடல்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். அது மட்டுமல்ல, திருப்பதி திருமலைக்கு ஆழ்வார் சென்றபோது கூட, அவருக்கு இந்த திருவிடந்தை பெருமாளின் நினைவு தான்.

    திருப்பதி குளக்கரையில், அருள்பாலிக்கும் வராகரைப் பார்த்ததும், ஏத்துவார்தம் மனத்துளான் இடவெந்தை மேவிய எம்பிரான் என்று இந்தப் பெருமாள் நினைவாகத்தான் பாடினார் திருமங்கையார். அதனால், திருவிடந்தை பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்வதற்குச் சமம் என்று கூறலாம்.

    108 திருப்பதிகளில் பெருமாள் வராகமூர்த்தியாக தம்பதி சமேதராக ஆதிசேஷன், பெருமாள் திருவடியைத் தாங்கி தரிசனம் தரும் திருப்பதியும் இது மட்டும் தான். உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டிப் பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளதால் அவர்களை வணங்கினால் இதுநாள் வரை உங்களுக்கு ஏற்பட்ட திருஷ்டிகளும் பறந்துவிடும்.

    தினசரி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும்.
    Next Story
    ×