search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த கொடிமரத்துக்கு காலை 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி, தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. விழாவின் 4-ம் திருநாளான வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. அம்பாள் 4 ரத வீதிகளையும் சுற்றி கோவிலை வந்து அடைகிறார்.

    10-ம் திருநாளான 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டு திருநாள் விழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 
    Next Story
    ×