search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம்

    திருச்செந்தூர் கடற்கரை யோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்செந்தூர் கடற்கரை யோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடந்தது.

    திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் அய்யா வைகுண்டர், பு‌ஷ்ப வாகனம், தொட்டில் வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 11-ம் திருநாள் தேரோட்டம் நேற்று நடந்தது.

    இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடைக்கு பின்னர் பு‌ஷ்ப வாகனத்தில் அய்யா பவனி நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையை தொடர்ந்து மதியம் 1.40 மணிக்கு அய்யா வைகுண்டர் தேரில் அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். தேரில் அமர்ந்த அய்யா வைகுண்டரை திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து அன்னதர்மம் வழங்கப்பட்டது. 
    Next Story
    ×