search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

    வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    புதுவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் வீராம் பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

    அது போல் இந்த ஆண்டு ஆடிப்பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் உபயதாரர்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் இரவு சாமி வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சம்பிரதாயப்படி ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டத்தை கவர்னர் மற்றும் முதல்- அமைச்சர் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைப்பது வழக்கம்.

    ஆனால், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கால மானதையொட்டி அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் டெல்லி சென்றுள்ளதையொட்டி தேரோட்டத்தை அமைச் சர்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.

    தேரோட்டத்தில் அனந்த ராமன் எம்.எல். ஏ., அரியாங் குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் மற்றும் இந்து அறநிலையத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு, ஆணையர் தில்லைவேல், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர் பக்தர்கள் வெள்ளத்தில் மாட வீதிகள் வழியே வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தையொட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்- மோர் வழங்கப்பட்டது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    நாளை (சனிக்கிழமை) இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவமும், வருகிற 24-ந் தேதி முத்துப்பல்லக்கு விழா வும் நடைபெறுகிறது.
    Next Story
    ×