என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகாலட்சுமியின் அவதாரம் - அக்கினியில் அவதரித்தாள்
Byமாலை மலர்7 Sep 2018 9:23 AM GMT (Updated: 7 Sep 2018 9:23 AM GMT)
மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமியின் அவதார கதையை அறிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமியின் அவதாரம் குறித்து ஆனந்த் ராமாயணத்தில் ஒரு தகவல் கூறப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
முன்காலத்தில் பத்மாட்சன் என்ற மன்னன் நீதிநெறி தவறாமல் நாட்டை ஆண்டு வந்தான். செல்வத்தின் தேவதையாகிய லட்சுமியை தன் பெண்ணாக அடைய வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் உண்டானது. அப்போதே காட்டுக்குள் சென்று லட்சுமிதேவியை நினைத்து குறித்துக் கடும் தவம் செய்தான்.
லட்சுமிதேவி பத்மாட்சன் முன் தோன்றி, 'நீ வேண்டும் வரம் யாது?' என்று கேட்டாள்.
பத்மாட்சன் மகாலட் சுமியை போற்றி துதித்து, 'தாயே! இந்த உலகில் எனக்கு எந்தவிதக் குறையும் இல்லை. எனக்குள்ள ஒரே மனக்குறை ஒரு குழந்தை இல்லையே என்பது தான். தாயே! தாங்களே எனக்கு மகளாக வந்து என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதுதான் எனக்குள்ள விருப்பம். அதற்கு அருள்பாலிக்கவேண்டும்' என்று கேட்டுக் கொண்டான்.
புன்னகை புரிந்த மகாலட்சுமி 'பத்மாட்சனே! நீ விரும்பும் வரத்தை அளிக்கும் உரிமை மட்டுமே எனக்கு இருக்கிறது. நானே உன் மகளாகப் பிறக்க வேண்டுமென்று விரும்பியதால் உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் சக்தி என் நாயகரான மகாவிஷ்ணுவிற்குத்தான் உண்டு. அதனால் அவருடைய அருளைக்கோரி தவம் செய்' எனக்கூறி மறைந்தாள்.
பத்மாட்சன் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
விஷ்ணு பகவான் பத்மாட்சன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.
பத்மாட்சன், மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்ற தன் ஆசையை வெளியிட்டான்.
'உன் எண்ணம் உடனே நிறைவேறும்' என மகாவிஷ்ணு வரம் கொடுத்தார்.
அடுத்த கணம் பத்மாட்சனின் முன்னால் எரிந்து கொண்டிருந்த யாக அக்னியில் இனிய குரலெடுத்து குழந்தை ஒன்று அழும் ஒலி கேட்டது.
திடுக்கிட்டு யாக அக்கினியை கவனித்த பத்மாட்சன், அக்கினிக்கு மத்தியில் அழகிய பெண் குழந்தை ஒன்று கை, கால்களை உதைத்து விளையாடியவாறு கிடப்பதை கண்டான்.
பிரமிப்படைந்த பத்மாட்சன் யாக அக்கினிக்குள் கை நீட்டி குழந்தையை வாரி எடுத்தான்.
யாக அக்கினி அவனைத் சுடவில்லை.
பத்மாட்சனின் மகளாக வளர்ந்த மகாலட்சுமி பல திருவிளையாடல்களை செய்த பின்னர் மகாவிஷ்ணுவை சென்றடைந்தாள் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறு ஆகும்.
முன்காலத்தில் பத்மாட்சன் என்ற மன்னன் நீதிநெறி தவறாமல் நாட்டை ஆண்டு வந்தான். செல்வத்தின் தேவதையாகிய லட்சுமியை தன் பெண்ணாக அடைய வேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் உண்டானது. அப்போதே காட்டுக்குள் சென்று லட்சுமிதேவியை நினைத்து குறித்துக் கடும் தவம் செய்தான்.
லட்சுமிதேவி பத்மாட்சன் முன் தோன்றி, 'நீ வேண்டும் வரம் யாது?' என்று கேட்டாள்.
பத்மாட்சன் மகாலட் சுமியை போற்றி துதித்து, 'தாயே! இந்த உலகில் எனக்கு எந்தவிதக் குறையும் இல்லை. எனக்குள்ள ஒரே மனக்குறை ஒரு குழந்தை இல்லையே என்பது தான். தாயே! தாங்களே எனக்கு மகளாக வந்து என்னை ஆட்கொள்ள வேண்டும் என்பதுதான் எனக்குள்ள விருப்பம். அதற்கு அருள்பாலிக்கவேண்டும்' என்று கேட்டுக் கொண்டான்.
புன்னகை புரிந்த மகாலட்சுமி 'பத்மாட்சனே! நீ விரும்பும் வரத்தை அளிக்கும் உரிமை மட்டுமே எனக்கு இருக்கிறது. நானே உன் மகளாகப் பிறக்க வேண்டுமென்று விரும்பியதால் உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் சக்தி என் நாயகரான மகாவிஷ்ணுவிற்குத்தான் உண்டு. அதனால் அவருடைய அருளைக்கோரி தவம் செய்' எனக்கூறி மறைந்தாள்.
பத்மாட்சன் பகவான் விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.
விஷ்ணு பகவான் பத்மாட்சன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார்.
பத்மாட்சன், மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்ற தன் ஆசையை வெளியிட்டான்.
'உன் எண்ணம் உடனே நிறைவேறும்' என மகாவிஷ்ணு வரம் கொடுத்தார்.
அடுத்த கணம் பத்மாட்சனின் முன்னால் எரிந்து கொண்டிருந்த யாக அக்னியில் இனிய குரலெடுத்து குழந்தை ஒன்று அழும் ஒலி கேட்டது.
திடுக்கிட்டு யாக அக்கினியை கவனித்த பத்மாட்சன், அக்கினிக்கு மத்தியில் அழகிய பெண் குழந்தை ஒன்று கை, கால்களை உதைத்து விளையாடியவாறு கிடப்பதை கண்டான்.
பிரமிப்படைந்த பத்மாட்சன் யாக அக்கினிக்குள் கை நீட்டி குழந்தையை வாரி எடுத்தான்.
யாக அக்கினி அவனைத் சுடவில்லை.
பத்மாட்சனின் மகளாக வளர்ந்த மகாலட்சுமி பல திருவிளையாடல்களை செய்த பின்னர் மகாவிஷ்ணுவை சென்றடைந்தாள் என்பது புராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறு ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X