search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முதன்மை தலம் மேல்மலையனூர்
    X

    முதன்மை தலம் மேல்மலையனூர்

    தமிழ்நாட்டில் எத்தனையோ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள் இருந்தால் எல்லா ஆலயங்களுக்கு தலைமை பீடமாக திகழ்வது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஆகும்.
    தமிழ்நாட்டில் எத்தனையோ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்களுக்கு எல்லாம் தலைமை பீடமாக திகழ்வது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஆகும்.

    தட்சனின் யாகத்தில் விழுந்த தாட்சாயிணியை சிவபெருமான் தூக்கி சுழன்று ஆடினார். அப்போது பார்வதி தேவியின் உடல்கள் உலகம் முழுக்க சிதறி விழுந்தது. அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள்தான் சக்தி தலங்களாக புகழ் பெற்று திகழ்கின்றன.

    தாட்சாயிணியின் வலது கை விழுந்த இடம் மேல்மலையனூர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே இந்த தலத்துக்கு சக்தி அதிகமாக காணப்படுகிறது. இங்குள்ள புற்றில் அன்னை நீண்ட ஆண்டுகளாக உறைந்து இருந்தாள். எனவே இத்தலத்தில் உள்ள புற்று மண் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் மாமருந்தாக திகழ்கிறது.
    Next Story
    ×