search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி நவராத்திரி விழா: பழனியில் இருந்து பூக்கள் அனுப்பும் பணி தீவிரம்
    X

    திருப்பதி நவராத்திரி விழா: பழனியில் இருந்து பூக்கள் அனுப்பும் பணி தீவிரம்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனியில் இருந்து திருப்பதிக்கு 800 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாடாமல்லி, செவ்வந்தி, பிச்சிப்பூ உள்ளிட்ட பூக்கள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்படும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருப்பதிக்கு நேற்று முன்தினம் 800 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக பூக்கள் அனைத்தும் பழனி மாரியம்மன் கோவில் வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டது.

    பின்னர் அதனை சாக்கு மூட்டைகளில் அடைத்து லாரியில் ஏற்றும் பணி நடந்தது. பழனி கந்தவிலாஸ் பாஸ்கரன், கோவில் கண்காணிப்பாளர் முருகேசன், புஸ்ப கைங்கரிய சபா நிர்வாகி மருதுசாமி உள்பட பலர் பூக்களை சாக்கு மூட்டைகளில் அடைக்கும் பணியை மேற்கொண்டனர். திருவிழா நிறைவடையும் வரை பழனியில் இருந்து பூக்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோல் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்தும் பூக்களை நேரடியாக திருப்பதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருப்பதாகவும் புஸ்ப கைங்கரிய சபா நிர்வாகிகள் தெரிவித்தனர். 
    Next Story
    ×