என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நவராத்திரி பிரம்மோற்சவம்: திருப்பதி கோவிலுக்கு 10 டன் மலர்கள் காணிக்கை
Byமாலை மலர்12 Oct 2018 5:18 AM GMT (Updated: 12 Oct 2018 5:18 AM GMT)
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழக பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10 டன் மலர்கள் காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் பலர் ஏழுமலையான் கோவிலுக்கு காய்கறிகள், மலர்கள், வாழை இலைகள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ரோஜா, சம்பங்கி, மல்லிகை உள்பட பல்வேறு வகையான மலர்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர். அந்த மலர்கள் திருமலைக்கு கொண்டுவரப்பட்டன. அத்துடன் திருச்செங்கோடு பக்தர்கள் இளநீர், மா இலைகள், 10 ஆயிரம் ரோஜா செடிகளை மலர்களுடன் காணிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் புஷ்ப கைங்கர்ய சபை சார்பில் மருதுசாமி என்பவர் பல்வேறு வகையான மலர்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். தமிழகத்தில் இருந்து 10 டன் மலர்கள் திரு மலைக்கு காணிக்கையாக வந்துள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ரோஜா, சம்பங்கி, மல்லிகை உள்பட பல்வேறு வகையான மலர்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர். அந்த மலர்கள் திருமலைக்கு கொண்டுவரப்பட்டன. அத்துடன் திருச்செங்கோடு பக்தர்கள் இளநீர், மா இலைகள், 10 ஆயிரம் ரோஜா செடிகளை மலர்களுடன் காணிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் புஷ்ப கைங்கர்ய சபை சார்பில் மருதுசாமி என்பவர் பல்வேறு வகையான மலர்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். தமிழகத்தில் இருந்து 10 டன் மலர்கள் திரு மலைக்கு காணிக்கையாக வந்துள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X