search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் சாட்டையால் தங்களை தாங்களே அடித்துக்கொண்ட போது எடுத்த படம்.
    X
    பக்தர்கள் சாட்டையால் தங்களை தாங்களே அடித்துக்கொண்ட போது எடுத்த படம்.

    அடைக்கலம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா

    கோவை பூசாரிபாளையத்தில் உள்ள அடைக்கலம்மன் கோவிலில் சாட்டையடி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கோவை பூசாரிப்பாளையத்தை அடுத்த பனைமரத்தூர் என்ற இடத்தில் பழமையான அடைக்கலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாட்டையடி திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடி கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தல், பிடிமண் எடுத்து வருதல், அம்மன் ஆற்றங்கரைக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் சாட்டையால் தங்களை தாங்களே அடித்துக் கொண்டு அம்மனை வழிபடும் சாட்டையடி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தங்களின் உடம்பில் சாட்டையால் அடித்து அம்மனை வழிபட்டனர்.

    அதன் பின்னர் அங்குள்ள ஒரு மைதானத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) அம்மன் திருவீதி உலா, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அம்மனுக்கு அபிஷேக பூஜை ஆகியவற்றுடன் திருவிழா முடிவடைகிறது.

    இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:-

    இந்த கோவில் 350 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் மழை நன்றாக பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி பல தலைமுறையாக சாட்டையால் அடித்து அம்மனை வழிபடும் வழக்கத் தை கொண்டு உள்ளனர். அதை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இந்த வழிபாட்டின்போது 5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்து அம்மனை வழிபடுகிறார்கள்.

    இதற்காக 8 நாட்கள் விரதம் இருந்த பின்னரே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் கள். சாட்டையால் தங்களது உடம்பில் அடிக்கும்போது காயங்கள் ஏற்பட்டாலும் வலிப்பது இல்லை. அந்த காயங்க ளுக்கு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறுவது கிடையாது. திருநீறு மட்டும் பூசுவார்கள். அடுத்த நாளே காயங்கள் மறைந்து விடும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×