search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவபெருமானுக்கு தாழம்பூ
    X

    சிவபெருமானுக்கு தாழம்பூ

    உத்தரகோசமங்கை திருத்தலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு தாழம்பூ சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    சிவபெருமானின் அடியையும், முடியையும் காணும் போட்டி விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் நடந்தது. இதில் ஈசனின் முடியைக் கண்டு விட்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு ஆதரவாக, தாழம்பூ சாட்சி சொன்னது.

    இதனால் சிவவழிபாட்டில் தாழம்பூ இருக்காது என்று ஈசன் சாபம் கொடுத்தார். சாபம் பெற்ற தாழம்பூ, உத்தரகோசமங்கை மங்களநாதரை வணங்கி சாப விமோசனம் பெற்றது. இதையடுத்து அந்த திருத்தலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு தாழம்பூ சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது.
    Next Story
    ×