என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
146 ஆண்டுகளுக்கு பிறகு சுனைலிங்க தரிசனம்
Byமாலை மலர்5 Jan 2019 2:49 AM GMT (Updated: 5 Jan 2019 2:49 AM GMT)
146 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்பட்ட சுனைலிங்கத்தை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தரிசனம் செய்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையையில் உள்ள மேலமலை பகுதியில் உள்ள விஜயாலய சோழீச்சுரம் கோவிலுக்கு கீழ் ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் ஒரு லிங்கம் உள்ளது. அந்த லிங்கத்தை 1872-ம் ஆண்டு மக்கள் வழிபட்டதாக கல்வெட்டு அங்கு உள்ளது.
இந்நிலையில் தொல்லியல் துறை அனுமதியோடு மோட்டார்களை கொண்டு சுனை நீரை இரைக்கும் பணி, கடந்த 30-ந் தேதி தொடங்கியது. இதில் சுமார் 20 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட சுனையில் இருந்து நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் சுனையில் இருக்கும் லிங்கத்தை பார்க்க குவிந்தனர். நேற்று காலை தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர், லிங்கம் வெளியே தெரிந்தது. இதையடுத்து சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன.
இதைத்தொடர்ந்து மதியம் சுனைலிங்கத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனர். 146 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்பட்ட சுனைலிங்கத்தை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X