search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரங்கநாதரின் பெருமைகள்
    X

    அரங்கநாதரின் பெருமைகள்

    கார்கோடகன் தினமும் கமலாலயத்திலிருந்து தீர்த்தம் கொணர்ந்து ஸ்ரீரங்கநாதருக்கு பூஜை செய்கிறான் என்பதற்கு சான்றாக இன்னும் மலைப் பாதையில் குளத்திலிருந்து கோவில்வரை பாம்பு சென்ற வழி காணப்படுகிறது என்பது ஐதீகம்.
    நகரின் கிழக்குப் பகுதியில் நகர் மத்தியில் சுமார் -100 படிக்கட்டுகளை கொண்ட ஸ்ரீரங்கநாதர் கோவில் குடவரையில் அமைந்திருக்கிறது. க்ஷீராப்திநாதர் சிங்கமும் கொண்ட மிக குரூரமான கார்கோடகன் என்ற பாம்பணையில் ஸ்ரீரங்கநாதர் என்ற திருநாமத்தோடு யோகநித்திரை புரிகிறார். திருவடிபுறத்தில் தாமஸகுணம் படைத்த அரக்கர்களான மது, கைடபர் இருவரும் தீச்செயல் புரிய வந்தவர்கள் பகவத் குணவிஷேசத்தால் பக்தர்களாக மாறி பகவத் சரணார விந்தங்களில் மலர் வழிபாடு செய்கிறார்கள்.

    உந்தியில் நான்முகனும், சங்கு, சக்கர, கதை, கத்தி, வில் முதலிய முனிபுங்கவர்கள், சூரிய சந்திரர்கள் யாவரும் தும்புரு முதலிய முனிபுங்கவர்களும், சூரிய சந்திரர்கள் யாவரும் பகவானைத் துதிக்கிறார்கள். ஸ்ரீநரசிம்ம கோவிலில் அமைந்திருப்பது போல் இங்கும் சங்கர நாராயணனுக்கு எதிர்புறத்தில் வாமன திரிவிக்கரம வடிவங்கள் சிற்ப வடிவில் அமைந்திருக்கின்றன.

    இக்குகையில் முக்கிய இடத்தில் பள்ளிகொண்ட பெருமாளும், பக்கங்களில் சங்கரநாராயணரும், வாமனரும் எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த தலத்திரத்தில் கார்கோடகன் தவமியற்றி பகவானை மகிழ்வித்து அவருக்கு படுக்கையானான். தினமும் கமலாலயத்திலிருந்து தீர்த்தம் கொணர்ந்து ஸ்ரீரங்கநாதருக்கு பூஜை செய்கிறான் என்பதற்கு சான்றாக இன்னும் மலைப் பாதையில் குளத்திலிருந்து கோவில்வரை பாம்பு சென்ற வழி காணப்படுகிறது என்பது ஐதீகம்.

    ஸ்ரீமகாலட்சுமி இத்தலத்தில் ஸ்ரீரங்கநாயகி என்ற பெயரால் தனி ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்

    Next Story
    ×