search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான்
    X

    பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான்

    கந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவர், தமிழ்க் கடவுள் முருகன் என்றும் பெயர் பெற்றுள்ளார்.
    கந்தன், சுப்பிரமணியன், ஆறுமுகன் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவர், தமிழ்க் கடவுள் முருகன் என்றும் பெயர் பெற்றுள்ளார். தேவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தி வந்த சூரபதுமர்களை அழிப்பதற்காக சிவபெருமானை அனைவரும் வேண்டினர்.

    இதையடுத்து சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அதனை வாயு பகவான் சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. இந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்கள் 6 பேரால் வளர்க்கப்பட்டனர்.

    இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். அன்னை பார்வதி, அந்த ஆறு குழந்தைகளையும் ஒரே குழந்தையாக மாற்றி ஞானப் பால் ஊட்டினார். பின்னர் அவருக்கு சக்தி வேலை வழங்கி சூரபதுமர்களை அழிக்க அனுப்பி வைத்தார்.
    Next Story
    ×