search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் 20-ந்தேதி நடக்கிறது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேரோட்டம் 20-ந்தேதி நடக்கிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா நாளை(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வருகிற 22-ந் தேதி வரை 11 நாட்கள் விமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 20-ந் தேதி நடக்கிறது.

    தைத்தேரோட்ட விழாவை முன்னிட்டு தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி நடைபெற்றது.

    அப்போது முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கல பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு முகூர்த்தகாலை கோவில் அறங்காவலர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர். தைத்தேரோட்ட விழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    விழாவின் இரண்டாம் நாளான மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும், 14-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வருகிறார். 15-ந் தேதி இரவு 7.15 மணிக்கு கருடசேவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.
    Next Story
    ×