search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகப்பெருமானுக்கு அலகு குத்திக் கொள்ளுதல்
    X

    முருகப்பெருமானுக்கு அலகு குத்திக் கொள்ளுதல்

    முருகனுக்கு நேர்த்திகடன் கழிக்க அலகு குத்திக் கொள்ளுதல் வழிபாடு கடுமையானதாக இருந்தாலும், பக்திப் பரவசத்துடன் நேர்த்திக்கடன் முடிப்பவர்களுக்கு நினைத்தது எல்லாம் நடக்கும்.!.
    பக்தர்கள் நாக்கிலும், கன்னங்களிலும், உடலெங்கிலும் வேல்களைக் குத்திக் கொண்டு அலகு குத்திக் கொண்டு பழனி முதலான திருத்தலங்களுக்கு வந்து முருகனை வழிபடுகின்றனர். அலகு குத்திக் கொள்ளுதல் நான்கு வகைப்படும்.

    1. நாவின் நடுவில் வேலைக்குத்திக் கொள்ளுதல். இதனைத் தாள் போடுதல் என்பர்.

    2. வேல், இரு கன்னங்களிலும் நேராக ஊடுருவிச் செல்லு மாறு குத்திக் கொள்ளுதல்.

    3. உடலின் மேற்பகுதிகளில் சிறுசிறு வேல்களைக் குத்திக் கொள்ளுதல்.

    4. இரண்டு நீண்ட இரும்புச் சட்டங்களை வளைத்து, பல துளைகளைச் செய்து, அவற்றில் நீண்ட வேல்களைச் செருகி உடலெங்கும் குத்திக் கொள்ளுதல்.

    இவை நான்கும், நேர்த்திகடன் கழிக்க, வேல்களைத் துணையாகக் கொண்டு செய்யப்படுகின்ற முருக வழிபாடு. இம்முறை கடுமையானதாக இருந்தாலும், பக்திப் பரவசத்துடன் நேர்த்திக்கடன் முடிப்பவர்களுக்கு நினைத்தது எல்லாம் நடக்கும்.!.
    Next Story
    ×