search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லை டவுன் தேரடி வீதியில் பஞ்ச கருட சேவை நடந்தபோது எடுத்தபடம்.
    X
    நெல்லை டவுன் தேரடி வீதியில் பஞ்ச கருட சேவை நடந்தபோது எடுத்தபடம்.

    நெல்லையில் பஞ்ச கருட சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்

    நெல்லை டவுனில் நேற்று இரவு பஞ்ச கருட சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தைத்திருவோணமும், தை அமாவாசையும் இணைந்து இந்த ஆண்டு வருவதால் பெருமாள் கோவில்களில் கருட சேவை நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடந்தது. இதையொட்டி நெல்லையை அடுத்த பேட்டை தென்திருப்பதி எனப்படும் வெங்கடாசல பெருமாள், சங்காணி வெங்கடாசல பெருமாள், நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் மகிழ்வண்ணநாத பெருமாள் ஆகிய கோவில்களில் நேற்று காலை திருமஞ்சனம் நடந்தது.

    பின்னர் அந்த கோவில்களில் சிறப்பு வழிபாடு, அலங்கார தீபம் நடந்தது.மாலை 6 மணிக்கு கரியமாணிக்க பெருமாள் கோவில்களில் இருந்து அனைத்து சுவாமிகளும் எழுந்தருளினர். சந்தி விநாயகர் கோவில், லாலா சந்திர முக்கில் 5 கருட வாகனங்களில் உள்ள பெருமாள்களுக்கும் தீபாராதனை நடந்தது.

    பின்னர் அங்கிருந்து புறப்பாடாகிய சுவாமிகள் பெரிய தேரடி திடல் அருகில் வந்தடைந்தனர். அங்கு சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. அங்கு இருந்து புறப்பாடாகி நெல்லையப்பர் தேரடி திடல் பகுதிக்கு சென்று பக்தர்களுக்கு சுவாமிகள் காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து இருந்தனர். 
    Next Story
    ×