என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆன்மிக தகவல்கள்
Byமாலை மலர்23 Feb 2019 6:19 AM GMT (Updated: 23 Feb 2019 6:19 AM GMT)
இறைவனுக்கு வழிபாடு செய்வது பற்றி புராணங்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன. இன்று சில முக்கியமான ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
எட்டு வித மலர்கள்
இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன. அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவை, செண்பக மலர், நந்தியாவட்டை, பாதிரி மலர், நீலோற்பவம், வெள்ளெருக்கு மலர், புன்னை மலர், செந்தாமரை, அலரி ஆகியவையாகும்.
ஏழு மலை
திருப்பதி வெங்கடாசலபதியை ‘ஏழு மலையான்’ என்றும் அழைப்பார்கள். ஏழு மலையின் மீது வீற்றிருப்பதால் அவருக்கு இந்தப் பெயர் வந்தது. கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். அவை, எருது மலை, கரு மலை, சைல மலை, பாம்பு மலை, கருட மலை, நாராயண மலை, வேங்கட மலை.
ஒன்பது வகை துளசி
பெருமாளுக்கு உகந்த அர்ச்சனைப் பொருட்களில் ஒன்று துளசி. பெருமாள் ஆலயங்களில் துளசியை தீர்த்தமாகத் தருவார்கள். அது உடலுக்கு அருமருந்தாக அமைந்தது. துளசியில் ஒன்பது வகையான துளசிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றை இங்கே பார்க்கலாம். கருந்துளசி, கற்பூரத் துளசி, காட்டுத் துளசி, கரிய மால் துளசி, செந்துளசி, நாமத் துளசி, பெருந்துளசி, சிவ துளசி, நீலத் துளசி.
ஒன்பது தீர்த்தங்கள்
நம் நாட்டில் ஒன்பது வகையான புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, காவிரி, குமரி, பாலாறு, சரயு ஆகியவையாகும். இந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் ஒருவரின் முன்ஜென்ம பாவங்கள் மற்றும் இந்த ஜென்ம பாவங்கள் மட்டுமல்லாது, அவரது பல தலைமுறை சந்ததியினரின் பாவங்களும் கூட கரைந்து போகும்.
இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடிய அற்புதமான மலர்கள் பற்றி புராணங்கள் நமக்கு சொல்லியிருக்கின்றன. அவற்றில் எட்டு மலர்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவை, செண்பக மலர், நந்தியாவட்டை, பாதிரி மலர், நீலோற்பவம், வெள்ளெருக்கு மலர், புன்னை மலர், செந்தாமரை, அலரி ஆகியவையாகும்.
ஏழு மலை
திருப்பதி வெங்கடாசலபதியை ‘ஏழு மலையான்’ என்றும் அழைப்பார்கள். ஏழு மலையின் மீது வீற்றிருப்பதால் அவருக்கு இந்தப் பெயர் வந்தது. கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். அவை, எருது மலை, கரு மலை, சைல மலை, பாம்பு மலை, கருட மலை, நாராயண மலை, வேங்கட மலை.
ஒன்பது வகை துளசி
பெருமாளுக்கு உகந்த அர்ச்சனைப் பொருட்களில் ஒன்று துளசி. பெருமாள் ஆலயங்களில் துளசியை தீர்த்தமாகத் தருவார்கள். அது உடலுக்கு அருமருந்தாக அமைந்தது. துளசியில் ஒன்பது வகையான துளசிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றை இங்கே பார்க்கலாம். கருந்துளசி, கற்பூரத் துளசி, காட்டுத் துளசி, கரிய மால் துளசி, செந்துளசி, நாமத் துளசி, பெருந்துளசி, சிவ துளசி, நீலத் துளசி.
ஒன்பது தீர்த்தங்கள்
நம் நாட்டில் ஒன்பது வகையான புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, காவிரி, குமரி, பாலாறு, சரயு ஆகியவையாகும். இந்த புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் ஒருவரின் முன்ஜென்ம பாவங்கள் மற்றும் இந்த ஜென்ம பாவங்கள் மட்டுமல்லாது, அவரது பல தலைமுறை சந்ததியினரின் பாவங்களும் கூட கரைந்து போகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X