search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தெட்சணத்து துவாரகாபதியில் அவதார தினவிழா: 3-ந்தேதி அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம்
    X

    தெட்சணத்து துவாரகாபதியில் அவதார தினவிழா: 3-ந்தேதி அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம்

    தெட்சணத்து துவாரகாபதியில் அவதார தினவிழாவை முன்னிட்டு அலங்கார தேர் பவனியுடன் அய்யா வழி பக்தர்கள் ஊர்வலம் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது
    கன்னியாகுமரி அருகே உள்ள துவாரகாபதி கடற்கரையில் தெட்சணத்து துவாரகாபதி ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் 187-வது அவதார தினவிழா நடக்கிறது.

    இதையொட்டி வருகிற 3-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு பணிவிடையும் உச்சிப் படிப்பும் 1 மணிக்கு அன்ன தர்மமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருநடை திறப் பும் இரவு 7 மணிக்கு அகிலத்திரட்டு ஆன்மீக சொற்பொழிவும் நடக்கிறது.

    2-ம் நாளான 4-ந்தேதி காலை 6 மணிக்கு திருநடை திறப்பு, உகப்படிப்பு, தாலாட்டு போன்றவை நடக்கிறது. பின்னர் அன்பு கொடி மக்கள் கடலில் புனித நீராடி அய்யாவின் தாரக மந்திரத்தை சொல்லி பதியை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 7 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.

    பகல் 12 மணிக்கு பணி விடையும் உச்சிப்படிப் பும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 1 மணிக்கு அய்யா வாகனத்தில் எழுந்தருளி வாரிக்கரையோரமாக வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 2 மணிக்கு அன்ன தர்மம் நடக்கிறது.

    அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழாவை யொட்டி புங்கரை பதியில் இருந்து ஜாண்சன் தலைமை யில் வருகிற 3-ந்தேதி மதியம் 2 மணிக்கு அய்யா வைகுண்ட சாமியின் 187-வது அவதார தினவிழா அலங்கார தேர் பவனியுடன் ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்களின் ஊர்வலம் தொடங்குகிறது. அன்று இரவு அந்த ஊர்வலம் கொட் டாரத்தை வந்து அடைகிறது.

    மறுநாள் (4-ந்தேதி) காலை 6 மணிக்கு அந்த ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு பெருமாள்புரம், மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு, பரமார்த்தலிங்க புரம், பழத்தோட்டம், விவே கானந்தபுரம், கன்னியா குமரி, கோவளம் வழியாக துவாரகாபதியை சென்று அடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தெட்சணத்து துவாரகா பதி ஸ்ரீமன் நாராயணசாமி திருக்கோவில் அறக்கட்டளை மற்றும் தர்மயுக மக்கள் இயக்கத்தினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×