search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவில்பட்டி மாலையம்மன் கோவிலில் மகாயஞ்ய பெருவிழா
    X

    கோவில்பட்டி மாலையம்மன் கோவிலில் மகாயஞ்ய பெருவிழா

    கோவில்பட்டி மகேசுவரர் சமேத மாலையம்மன் கோவிலில் மாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சதுஷ்டி மகா பைரவ சம்மேளன மகாயஞ்ய பெருவிழா நடைபெற்றது.
    கோவில்பட்டி மகேசுவரர் சமேத மாலையம்மன் கோவிலில் மாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சதுஷ்டி மகா பைரவ சம்மேளன மகாயஞ்ய பெருவிழா நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணிக்கு மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், புண்யாகவாசனம், 64 பைரவர் கலச பூஜை ஆகியவை நடந்தது.தொடர்ந்து, பைரவருக்கு சிறப்பு ஏகாதச ருத்ரஜெபம், மகா ஹோமம், அபிஷேகம், பூர்ணாகுதி, வாஸோதாரா ஹோமம் ஆகியவை நடந்தது.

    பின்னர் அலங்காரம் புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. பூஜைகளை பால சுப்பிரமணியன், நாராயண சர்மா மற்றும் குழுவினர் நடத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி விழா குழுவினர் சங்கர், வெங்கட்ஜி ஆகியோர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் சங்க தலைவர் பூவலிங்கம், செயலாளர் பழனிகுமார், முன்னாள் தலைவர் காளியப்பன், பள்ளி செயலாளர் வெங்கடேஷ், சங்க துணை செயலாளர்கள் மணிமாறன், வேல்முருகன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், தங்கமாரியப்பன், முத்துராஜ், குன்னிமலைராஜா, பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×