என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்12 March 2019 4:03 AM GMT (Updated: 12 March 2019 4:03 AM GMT)
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற சிவன் தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன்தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி விநாயகர், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பாக எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் இரவு சாமி வீதி உலா நடைபெற உள்ளது. விழாவில் வருகிற 20-ந் தேதி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள அக்னி தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இதையடுத்து காவிரி ஆற்றில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்குனி உத்திர விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
கொடியேற்றத்தையொட்டி விநாயகர், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரம் முன்பாக எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் இரவு சாமி வீதி உலா நடைபெற உள்ளது. விழாவில் வருகிற 20-ந் தேதி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள அக்னி தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இதையடுத்து காவிரி ஆற்றில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்குனி உத்திர விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X