search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.
    X
    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.

    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது

    அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 21-ந் தேதி சுவாமி கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குரும்பூர் அருகே மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. அதிகாலை 5.50 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் உற்சவர் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் இரவில் உற்சவர் அய்யனார் சப்பரத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 6-ம் நாளான வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    10-ம் நாளான 21-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மதியம் 2 மணிக்கு பக்தர்கள் நேமிசங்களை செலுத்தி அய்யனாரை வழிபடுகின்றனர். இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 1 மணிக்கு உற்சவர் அய்யனார் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி, மேலப் புதுக்குடி கிராம வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

    விழா நாட்களில் தினமும் இரவில் வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் போன்றவை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் உத்திரபாண்டியன் நாடார், வீரசிங் நாடார், லட்சுமண பாண்டியன் நாடார், சேர்மத்துரை நாடார், அசோகராஜ் நாடார், ஜெயக்குமார் நாடார், அழகேசன் நாடார், பாஸ்கர் நாடார் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×