search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜபாளையம் அருகே பங்குனி உத்திர விழா: தீர்த்தம் சுமந்து பக்தர்கள் வழிபாடு
    X

    ராஜபாளையம் அருகே பங்குனி உத்திர விழா: தீர்த்தம் சுமந்து பக்தர்கள் வழிபாடு

    ராஜபாளையம் அருகே பங்குனி உத்திர விழா: தீர்த்தம் சுமந்து பக்தர்கள் வழிபாடு
    ராஜபாளையம் சஞ்சீவிமலை கிழக்கு அடி வாரம் இந்திரா நகரில் ஜெய் காளியம்மன் கோவிலில் பங்குனிஉத்திரத்தை முன்னிட்டு கங்கா ஜல வருஷாபிஷேக விழா நடை பெற்றது.

    தர்மகர்த்தா செந்திலா திபன் மேற்பார்வையில் இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் கோதண்டராமன் தலைமையில் சேலம் உதவி (கலால்) ஆணையாளர் ராமசாமி, ஜானகிராம் மில்ஸ் சுப்பிரமணியராஜா ஆனந்தாஸ் பீமராஜா, தொழிலதிபர்கள் சுப்ப ராஜா, ஹரிஹரன், பாரதிநகர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தர்மகிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அர்ச்சகர்கள் கோவிந்த ராஜ், சீத்தாராமன், வெங்கட் ராமன், சீனிவாசன், ஆகியோர் பூஜையை நடத்தி வைத்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் புண்ணியதீர்த்தங்களை சுமந்து அம்மனை வலம் வந்தனர்.

    அம்மனுக்கு வருஷா பிஷேகத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அன்னதானம் நடைபெற்றது.
    Next Story
    ×