என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடக்கம்
Byமாலை மலர்10 April 2019 5:59 AM GMT (Updated: 10 April 2019 5:59 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் திருவிழா தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்கள் இத்திருநாள் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள்(பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் நேற்று மாலை தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்கள் இத்திருநாள் நடைபெறுகிறது. வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார்.
பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 14-ந் தேதி தொடங்கி 18-ந்் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவையும் நடைபெறுகிறது.
வெளிக்கோடை, உள்கோடை திருநாளை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி வரை இரவு 8.45 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 19-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் நேற்று மாலை தொடங்கியது. வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்கள் இத்திருநாள் நடைபெறுகிறது. வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார்.
பின்னர், அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 14-ந் தேதி தொடங்கி 18-ந்் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவையும் நடைபெறுகிறது.
வெளிக்கோடை, உள்கோடை திருநாளை முன்னிட்டு வருகிற 18-ந் தேதி வரை இரவு 8.45 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. 19-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணிக்கு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X