search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயில் ஏறும் மயில்வாகனன்
    X

    மயில் ஏறும் மயில்வாகனன்

    முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவரது ஒவ்வொரு பெயருக்குமே அதற்கான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.
    ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பது பழமொழி. ஆரோக்கியத்தைச் சீராக்குவது சுக்கு. அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது சுப்ரமணியர் வழிபாடு. அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவரது ஒவ்வொரு பெயருக்குமே அதற்கான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.

    சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்

    கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்

    சேவற்கொடியோன் - சேவலைக் கொடியாகக் கொண்டவன்

    சரவணபவன் - சரவணப் பொய்கையில் தோன்றியவன்

    காங்கேயன் - கங்கையில் வளர்ந்தவன்

    மயில்வாகனன் - மயிலை வாகனமாகக் கொண்டவன்

    சுப்ரமணியன் - பிரம்மத்தில் உயர்ந்தவன்

    சண்முகன் - ஆறுமுகம் கொண்டவன்

    வேலவன் - வேலைக் கையில் கொண்டவன்
    Next Story
    ×