என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
Byமாலை மலர்19 April 2019 5:32 AM GMT (Updated: 19 April 2019 5:32 AM GMT)
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்புடன் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருட சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடந்தது.
அதையொட்டி காலை 11 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பகல் 1 மணியளவில் மகா தீபாராதனை செய்யப்பட்டது. மாலை 4 மணியளவில் தேர் கடாட்சம் எனும் தேரோட்டத்துக்கான சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து 5 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு சென்றடைதல் நடந்தது. பின்னர் 6 மணியளவில் கோவில் தலைமை குருக்கள் குருநாதன், சுவாமியின் பரிவட்டத்தைக்கொண்டு கொடியசைக்க தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டம் நகரின் ரதவீதிகளில் வலம் வந்து தேரடியை அடைந்தது. அதன்பிறகு தீபாராதனை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, கணக்கர் ஜெயப்பிரகாஷ், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர். சித்திரை திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது.
அதையொட்டி காலை 11 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பிறகு பகல் 1 மணியளவில் மகா தீபாராதனை செய்யப்பட்டது. மாலை 4 மணியளவில் தேர் கடாட்சம் எனும் தேரோட்டத்துக்கான சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து 5 மணியளவில் அபிராமி அம்மன்-பத்மகிரீசுவரர், கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு சென்றடைதல் நடந்தது. பின்னர் 6 மணியளவில் கோவில் தலைமை குருக்கள் குருநாதன், சுவாமியின் பரிவட்டத்தைக்கொண்டு கொடியசைக்க தேரோட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டம் நகரின் ரதவீதிகளில் வலம் வந்து தேரடியை அடைந்தது. அதன்பிறகு தீபாராதனை செய்யப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, கணக்கர் ஜெயப்பிரகாஷ், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர். சித்திரை திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி திருவிழா நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X