search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடும்பப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
    X

    கொடும்பப்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்

    கொடும்பப்பட்டியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே கொடும்பப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த 21-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து தினமும் மண்டகப்படி நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

    நேற்று முன்தினம் பால்குடம், அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேரில் அலங்கரிக்கப்பட்ட முத்துமாரியம்மனை எழுந்தருள செய்தனர். பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிலையில் இருந்து புறப்பட்ட தேர் ஊரை சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது. அப்போது தேரின் பின் பகுதியில் சென்ற பெண்கள் தரையில் படுத்து சாமி கும்பிட்டுக் கொண்டே சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று(செவ்வாய்க்கிழமை) புரவி எடுப்பு விழா, பாரிவேட்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது. 
    Next Story
    ×