என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் தெப்பத் திருவிழா
Byமாலை மலர்15 May 2019 4:58 AM GMT (Updated: 15 May 2019 4:58 AM GMT)
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரைத் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை மாத தெப்பத் திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, பக்தி மெல்லிசை, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டமும், சப்தா வர்ண நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தட்டுவாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் மேளதாளத்துடன் தெப்பத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து தெப்பக்குளத்தை தெப்பம் 3 முறை சுற்றி வந்தது. முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழத்தெரு இளைஞர்களும் வடம்பிடித்து இழுத்து வந்தனர்.
3-வது சுற்றின் முடிவில் அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளி ரதவீதிகள் வழியே உலா வந்தனர். அப்போது பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.
9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டமும், சப்தா வர்ண நிகழ்ச்சியும் நடந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தட்டுவாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் மேளதாளத்துடன் தெப்பத்தில் எழுந்தருளினர்.
தொடர்ந்து தெப்பக்குளத்தை தெப்பம் 3 முறை சுற்றி வந்தது. முதல் சுற்றை காக்கமூர் இளைஞர்களும், 2-வது சுற்றை மேலத்தெரு இளைஞர்களும், 3-வது சுற்றை கீழத்தெரு இளைஞர்களும் வடம்பிடித்து இழுத்து வந்தனர்.
3-வது சுற்றின் முடிவில் அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனங்களில் சுவாமி, அம்பாள், பெருமாள் எழுந்தருளி ரதவீதிகள் வழியே உலா வந்தனர். அப்போது பக்தர்கள் திருக்கண் சார்த்தி வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X