என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ரத சப்தமி விழா: திருப்பதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்16 Feb 2021 12:44 PM IST (Updated: 16 Feb 2021 12:44 PM IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருமலை :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை ஏழுமலையான் 7 வாகனங்களில் வலம் வருவார்.
இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை, திருப்பதி புறநகர் மாவட்ட போலீசார் இணைந்து ஆலோசனை நடத்தினர்.
தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை பிரிவு அதிகாரி கோபிநாத் ஜாட்டி, புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலா நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
ரத சப்தமி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள், கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கும் வாகன சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வினியோகம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பது, அலிபிரியில் தரிசன டோக்கன்களை பரிசோதனை செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் திருமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 19-ந்தேதி ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று காலை முதல் இரவு வரை ஏழுமலையான் 7 வாகனங்களில் வலம் வருவார்.
இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருமலை- திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை, திருப்பதி புறநகர் மாவட்ட போலீசார் இணைந்து ஆலோசனை நடத்தினர்.
தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை பிரிவு அதிகாரி கோபிநாத் ஜாட்டி, புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெங்கட அப்பலா நாயுடு ஆகியோர் பங்கேற்றனர்.
ரத சப்தமி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பார்க்கிங் வசதிகள், கோவிலின் நான்கு மாடவீதிகளில் நடக்கும் வாகன சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வினியோகம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுப்பது, அலிபிரியில் தரிசன டோக்கன்களை பரிசோதனை செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் திருமலை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனிராமையா, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X