என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சக்தி முனியப்பன் கோவில் திருவிழா: ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் வழிபாடு
Byமாலை மலர்5 Jan 2022 10:31 AM IST (Updated: 5 Jan 2022 10:31 AM IST)
சக்தி முனியப்பன் கோவில் திருவிழாவில் ஆடு, கோழி மற்றும் பன்றி பலியிட்டு முப்பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பென்னாகரம் ரோடு ரெயில்வே கேட் அருகே உள்ள ஸ்ரீ சக்தி முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி முனியப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் ஆடு, கோழி மற்றும் பன்றி பலியிட்டு முப்பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். விழாவையொட்டி குமாரசாமிப்பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சீர் வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்தி முனியப்பன் கோவிலை வந்தடைந்தது.
அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடந்தது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், அன்னதானம் வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். விழாவையொட்டி குமாரசாமிப்பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சீர் வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்தி முனியப்பன் கோவிலை வந்தடைந்தது.
அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடந்தது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், அன்னதானம் வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X