என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
மழையால் கோவிலுக்குள் யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்
Byமாலை மலர்12 April 2022 10:35 AM IST (Updated: 12 April 2022 10:35 AM IST)
மதுரையில் பெய்த மழையால் கோவிலுக்குள் யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். மாசி வீதிகளில் உலா வராததால் தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் 4 மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் காலை, இரவு என இருவேளையும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனை காண மாசி வீதிகளில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் 7-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு சுந்தரேசுவரர் நந்திகேசுவரர் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்கள்.
பின்னர் அவர்கள் வீதி உலாவிற்கு தயாரான போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சிறிது நேரம் அம்மன் சன்னதி திருவாட்சி மண்டபம் முன்பு சுவாமி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சுவாமி வருகைக்காக பக்தர்களும் மாசி வீதியில் கூடியிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.
அதை தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அங்கேயே சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மீண்டும் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் வீதி உலா வருவது தடை செய்யப்பட்டதால் பக்தர்கள் தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருக்கல்யாணம் நடைபெறும் இடங்கள், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வழிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் 7-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு சுந்தரேசுவரர் நந்திகேசுவரர் வாகனத்திலும், மீனாட்சி அம்மன் யாளி வாகனத்தில் எழுந்தருளினார்கள்.
பின்னர் அவர்கள் வீதி உலாவிற்கு தயாரான போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சிறிது நேரம் அம்மன் சன்னதி திருவாட்சி மண்டபம் முன்பு சுவாமி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சுவாமி வருகைக்காக பக்தர்களும் மாசி வீதியில் கூடியிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுவாமி வீதி உலா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது.
அதை தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு அங்கேயே சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மீண்டும் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் வீதி உலா வருவது தடை செய்யப்பட்டதால் பக்தர்கள் தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதற்கிடையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருக்கல்யாணம் நடைபெறும் இடங்கள், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வழிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு 8.20 மணிக்கு மேல் 8.44 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X