search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி ஸ்ரீ கோதண்டராமாலயத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆனிவார ஆஸ்தானம்
    X

    திருப்பதி ஸ்ரீ கோதண்டராமாலயத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆனிவார ஆஸ்தானம்

    • திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வந்த பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தனர்.
    • கருடாழ்வார் முன் உற்சவ மூர்த்திகள் கொண்டு வந்து ஆஸ்தானம் நடைபெற்றது.

    திருப்பதி ஸ்ரீ கோதண்டராமாலயத்தில் ஆனிவார ஆஸ்தானம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயிலில் உள்ள கருடாழ்வார் முன் சீதா லட்சுமணருடன் கோதண்டராமர் உற்சவ மூர்த்திகள் கொண்டு வந்து ஆஸ்தானம் நடைபெற்றது.

    திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வந்த பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தனர். ஆனிமாசத்தின் கடைசி நாளில் நடைபெறுவதால் ஆனிவார ஆஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

    முன்னதாக, டி.டி.டி இன் வருமானச் செலவுகள், இருப்புக்கள் போன்றவற்றின் வருடாந்திர கணக்கீடு இந்த ஆஸ்தான நாளில் இருந்து தொடங்கும், இது மஹந்த் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட நாளாகும்.

    Next Story
    ×