search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆரணி ஸ்ரீராமலிங்க சாமுண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
    X

    ஆரணி ஸ்ரீராமலிங்க சாமுண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

    • நாளை பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி தேவி திருவீதி உலா நடக்கிறது.
    • நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழா நடக்கிறது.

    சோழவரம் ஒன்றியம், ஆரணி பஜார் வீதியில் புகழ்மிக்க ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி கோவில் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலின் கோபுரங்கள் மற்றும் வாகனங்கள் பழுது பார்த்து வர்ணம் பூசி திருப்பணிகள் நடைபெற்றது. இதையடுத்து 18 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதை முன்னிட்டு திங்கட்கிழமை காலை முதல் கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.இன்று காலை மகா பூர்ணாகுதி முடிவுற்று புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவிலின் அர்ச்சகர்கள் சுப்ரமணிய குருக்கள், நடராஜ குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று ராஜகோபுரம், விமானங்களுக்கும், பரிவார மூர்த்தி கள்,மூலவர் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாசர்ல ஹேமபூசனம் தலைமையில் புவனகிரி வெங்கடேஸ்வரலு, கொள்ளி லீலாராம்,மாசர்ல சீனிவாசலு, பி.முனி சந்திரய்யா மற்றும் விழா குழுவினர்களும்,கிராம பொது மக்களும், பக்தர்களும் செய்திருந்தனர். நாளை மாலை பஞ்ச மூர்த்திகளுடன் ஸ்ரீ ராமலிங்க சாமுண்டேஸ்வரி தேவி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக விழா நடக்கிறது.

    Next Story
    ×