search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆவணி மாத பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம்
    X

    ஆவணி மாத பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம்

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடு வதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, பவுர்ணமி வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி மறுநாள் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.02 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.

    பவுர்ணமி கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுவதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×