search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவன் கோவிலை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள்
    X

    சிவன் கோவிலை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள்

    • திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.
    • திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    சென்னை:

    கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. நமது ஊரில் உள்ள கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்து வரவேண்டும் என முன்னோர் வலியுறுத்தி உள்ளனர்.

    அதன்படி, எந்த ஊருக்குச் சென்று எந்த சாமியை வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

    திருக்கருக்குடி கோவிலை வணங்கினால் குடும்ப கவலை நீங்கும்.

    திருக்கருவேலி கோவிலை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம். வறுமை நீங்கும்.

    திருவழுந்தூர் கோவிலை வணங்கினால் முன்ஜென்ம பாவம் விலகும்.

    திருப்பராய்துறை கோவிலை வழிபட்டால் கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெறலாம்.

    திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.

    திருவெறும்பூர் கோவிலை வழிபட்டால் அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெறலாம்.

    திருப்பைஞ்ஞீலி கோவிலை வணங்கினால் எம பயம் விலகும்.

    திருவையாறு கோவிலை வழிபட்டால் அக்னி தோஷம் விலகும்.

    திருவைகாவூர் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்தால் பாவங்கள் விலகும்.

    திருமங்கலங்குடி ஈசனை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம்.

    திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    திருமுல்லைவாயல் ஈசனை வணங்கினால் சந்திர தோஷம் விலகும்.

    திருவெண்காடு கோவிலை வழிபட்டால் ஊழ்வினை தோஷம் நீங்கும்.

    திருநெல்வேலி நெல்லையப்பரை வணங்கினால் மகான்களுக்கு செய்த குற்றம் விலகும்.

    திருக்குற்றாலம் குற்றால நாதரை வேண்டினால் முக்தி கிடைக்கும்.

    திருவாலவாய் கோவிலை வணங்கினால் நட்சத்திர தோஷம் நீங்கும்.

    திருப்பரங்குன்றத்தை வழிபட்டால் வாழத் தெரியாது தவிப்பவர்களுக்கு வழி கிடைக்கும்.

    திருவாடானை தலத்தை வணங்கினால் தீராத பாவம் நீங்கும்.

    திருமுருகநாத சுவாமி கோவிலை வழிபட்டால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலகும்.

    திருப்பாதிரிபுலியூர் தலத்தை வணங்கினால் தாயை விட்டுப் பிரிந்திருக்கும் குழந்தைக்கு தோஷம் நீங்கும்.

    திருவேற்காடு ஈசனை வணங்கினால் வாணிப பாவம் விலகும்.

    திருமயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபட்டால் 3 தலைமுறை தோஷம் நீங்கும்.

    Next Story
    ×