search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் 25-ந்தேதி மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு
    X

    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் 25-ந்தேதி மகாளய அமாவாசை சிறப்பு வழிபாடு

    • இந்த கோவிலில் சிதறு தேங்காய் உடைத்தால் திருமண தடைகள் நீங்கும்.
    • மூலை அனுமார் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற மஞ்சள் பூசிய தேங்காயை தங்களது இல்லத்தில் இருந்து எடுத்து வந்து மூலை அனுமாரை புகழ் பெற்ற ராசி மண்டலம் சிற்பத்தில் அவரவர் ராசிக்கு கீழ் நின்று தரிசனம் செய்து மனம் உருகி தரிசனம் செய்வார்கள்.

    பின்னர் காணிக்கையாக ரூ.18 உண்டியலில் செலுத்தி சிதறு தேங்காய் உடைத்தால் திருமண தடைகள் நீங்கும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். பூர்வ ஜென்மம், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் வருகிற 25-ந் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு காலை 7 மணிக்கு லட்ச ராமநாமம் ஜெபம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகள் நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு கனிகளால் ஆன சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதனையடுத்து 1,008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. மூலை அனுமாருக்கு மகாளய அமாவாசை அன்று பழங்களால் ஆன மாலை சாற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    Next Story
    ×