என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா 25-ந்தேதி தொடங்குகிறது
- கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது.
- விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை போன்றவை நடைபெறும்.
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய வவ்வால் குகை பாலமுருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. விழாவில் முதல்நாள் காலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு வவ்வால் குகை பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பின்னர் காப்பு கட்டுதல் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பக்தி பஜனை போன்றவை நடைபெறும்.
30-ந் தேதி காலையில் வவ்வால் குகை பாலமுருகனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, மாலை 4 மணிக்கு பாலமுருகன் போர்காலமுருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சூரனை பாலமுருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி, பின்னர் வாணவேடிக்கை, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பாலமுருகன் மயில் வாகனத்தில் எழுந்தருளல் போன்றவை நடக்கிறது.
31-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், பின்னர் மாபெரும் அன்னதானமும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட்டளை தலைவர் சண்முகபெருமாள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்