search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர கொடியேற்று விழா
    X

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர கொடியேற்று விழா

    • கடலூர் பாடலீஸ்வரர் கோவிலுக்குள் பெரியநாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.
    • ஆடிப்பூர விழா 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் பெரியநாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பூர விழா 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 6 மணி அளவில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அதைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் சன்னதியில் பராசக்தி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சன்னதியில் உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க ரிஷப கொடி ஏற்றப்பட்டது.

    அதன்பிறகு சாமி ஆலயத்தை வலம் வந்து, தீபாராதனை நடந்தது. மாட வீதிகளில் சாமி வீதி உலாவும் நடந்தது. இரவு 8 மணிக்கு தீபாராதனை, வீதி உலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை நாகராஜன் தலைமையிலான குருக்கள் செய்து வருகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×