search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை
    X

    பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை

    • பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது.
    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் 6-ம் நாளில் திருக்கல்யாணமும், 7-ம் நாள் தேரோட்டமும் வெகு விமரிசையாக நடந்தது. திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் ராக்கால பூஜைக்கு பின் பள்ளியறை பூஜை நடத்தப்படுவதில்லை.

    இந்தநிலையில் 15-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதையொட்டி இன்று பழனி முருகன் கோவிலில் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. பின்னர் கைலாசநாதர் சன்னதியில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், சாந்தி கும்பபூஜை, ஹோமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜைக்கு பின் உச்சிகால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம் செய்து, பின்னர் கலச அபிஷேகம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கந்தவிலாஸ் செல்வகுமார், நவீன், நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இதேபோல் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் உற்சவ சாந்தி பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகம், சன்னதிகள் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து சிறப்பு யாகம், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×